கர்பரக்ஷாம்பிகை - இருப்பிடம்
கர்பரக்ஷாம்பிகை கோவில் இந்தியா-தமிழ்நாடு- தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர்
என்ற ஊரில்
அமைந்துள்ளது. இப்பிரபலமானக்கோவில் முல்லைவன நாதர் (சிவபெருமான்) கோவில்
என்ற பெயரில்
அழைக்கப்படுகிறது. அம்மன் கர்பரக்ஷாம்பிகை
(பார்வதி தேவி) பாதுகாப்பான கர்ப்பம், சுகப்பிரசவம்
மற்றும் குழந்தை பிறப்பிற்கு உதவி புரிகிறாள்
என்று நம்பப்படுகிறது. கர்ப்பிணியாக
காத்திருக்கும் பெண்களும் குழந்தை
வரம் வேண்டி
பிரார்த்தனை செய்ய இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இத்திருக்கோவில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
தங்கும் / உணவு
வசதி
இத்திருக்கோவிலின் அருகில் சிறிய கடைகள் உள்ளன.
அங்கு சாதாரண
உணவு வகைகள்
நியாயமான விலையில் கிடைக்கின்றன.
தங்கும் வசதி
- கோவில் மற்றும்
தனியார் சார்ந்த
உறைவிடங்களாகவும் கிடைக்கின்றன.